இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு தடை இல்லை: வர்த்தக அமைச்சகம்

வெங்காயம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. அதே வேளையில் 2022ல் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் சுமார் 523.8 மில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்கள் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

DIN

வெங்காயம் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. அதே வேளையில் 2022ல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலங்களில் சுமார் 523.8 மில்லியன் டாலர் மதிப்பிலான பண்டங்கள் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அதில் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் ஏற்றுமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 டிசம்பரில், வெங்காய ஏற்றுமதி சுமார் 50 சதவீதம் அதிகரித்து 52.1 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான மாதங்களில் ஏற்றுமதி 16.3 சதவீதம் அதிகரித்து 523.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமீபத்திய ட்விட்டர் பக்க பதிவில், இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடை இல்லை என்று பதிவிட்டிருந்தார்.

பிப்ரவரி 25 ஆம் தேதி வெங்காய ஏற்றுமதி குறித்து என்சிபி தலைவர் சுப்ரியா சுலே ட்விட்டர் பதிவவை அடுத்து இந்த அறிப்பு வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஹல்காம் தாக்குதல்! உறுதியளிக்கப்பட்ட அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் கொல்லப்பட்டவரின் மகள்!

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026! முக்கிய அம்சங்கள்!

சொத்தையான அத்திப்பழம்: இடைக்கால பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை 97%-ஆக உயர்வு!

மாணவர்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழல்! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு!

SCROLL FOR NEXT