இந்தியா

கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடிகள் சேதம்!

கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு நடத்தப்பட்டது.

DIN


பெங்களூரு: கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில், 2 ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

மைசூரு-சென்னை வந்தே பாரத் ரயில் மீது கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மர்மநபர்கள் சிலர் கற்களை வீசினர். இதில், ரயிலின் இரண்டு கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

வந்தே பாரத் ரயில்கள் மீது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடந்த ஜனவரியில் 21 கல்வீச்சு சம்பவங்களும், இந்த மாதம் 13 கல்வீச்சு சம்பவங்களும் ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வேதனை தெரிவித்துள்ளது. 

இதேபோன்ற சம்பவங்கள் நாட்டின் பிற பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT