கோப்புப் படம் 
இந்தியா

2 நாள் பயணமாக ராஜஸ்தான் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று ராஜஸ்தானுக்குச் செல்கிறார். 

IANS

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று ராஜஸ்தானுக்குச் செல்கிறார். 

ஜெய்ப்பூரில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு பூங்காவை அவர் திறந்துவைக்கிறார். 

முர்மு ராணுவ விமானம் மூலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்குச் செல்கிறார். பின்னர், சிவில் லைன்ஸில் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பூங்காவைத் திறந்துவைக்கிறார். 

ஜெய்ப்பூர் மற்றும் மௌண்ட் அபுவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், பாலியில் நடக்கும் சாரணர் வழிகாட்டியின் தேசிய ஜம்போரியிலும் அவர் கலந்துகொள்கிறார். 

புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு பூங்கா வாரத்தில் இரண்டு நாள்கள் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இந்த பூங்கா சுமார் ரூ.9.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பூங்காவில் உலோகத்தால் செய்யப்பட்ட மகாத்மா காந்தியின் 12 அடி சிலையும், மகாராணா பிரதாப் மற்றும் அவரது குதிரை சேதக் ஆகியோரின் பளிங்கு சிலையும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதியில் பெங்கால்!

SCROLL FOR NEXT