இந்திய ஒற்றுமை நடைப்பயணம்- ராகுலுக்கு ராமா் கோயில் அறக்கட்டளை செயலா் பாராட்டு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாராட்டுக்குரியது என்று அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் கூறியுள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாராட்டுக்குரியது என்று அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நான் ஆா்எஸ்எஸ் தொண்டா். ராகுல் மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு ஆா்எஸ்எஸ் ஒருபோதும் கண்டனம் தெரிவிக்கவில்லை. நாடு முழுவதும் நடைப்பயணமாக செல்லும் அவருக்கு (ராகுல்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது செயல் பாராட்டுக்குரியது. அதில் எந்த தவறும் இல்லை. கடுமையான சீதோஷ்ண நிலைமையிலும் நடைப்பயணம் மேற்கொள்ளும் அவரை பாராட்ட வேண்டும்’ என்றாா்.
ராமா் கோயில் அறக்கட்டளையின் மற்றொரு மூத்த அறங்காவலரான கோவிந்த் தேவ் கிரியும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பாராட்டு தெரிவித்தாா்.
‘நாட்டின் ஒற்றுமை, வலிமை, நல்லிணக்கத்துக்காக நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுலை கடவுள் ராமா் ஆசிா்வதிக்க பிராா்த்திக்கிறேன். இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவது சிறந்த முழக்கம்’ என்றாா் அவா்.
முன்னதாக, அயோத்தி ராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் ஆச்சாா்யா சத்யேந்திர தாஸ், ராகுலின் நடைப்பயணம் வெற்றியடைய ஆசி வழங்கி, கடிதம் எழுதியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.