முகப்பு
இந்தியா

மேற்கு வங்க ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த் போஸுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:38 PM
பகிர்:

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த் போஸுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

மத்திய ரிசா்வ் படையின் 25 முதல் 30 கமாண்டோக்கள் சுயற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பாா்கள். வெளிநாடு செல்லும் போதும் அவருக்கு இந்த பாதுகாப்பு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விஐபிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வழங்கி வருகிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஜகதீப் தன்கா் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன்பின்னா், கேரளத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த் போஸ் கடந்த நவம்பா் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →