இந்தியா

வீட்டில் துப்பாக்கிகள் வைத்திருந்த முன்னாள் எம்எல்ஏ கைது!

வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த அசாம் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN

வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த அசாம் மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தின் சப்பாகுரி சட்டப்பேரவையின் உறுப்பினராக கடந்த 2011 முதல் 2016 வரை பதவி வகித்தவர் ஹிதேஷ் பாசுமதி. இவரது வீட்டில் துப்பாக்கிகள் இருந்த குற்றச்சாட்டிற்காக இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோக்ரஜர் மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில்,

முன்னாள் எம்எல்ஏ வீட்டிலிருந்து ஏகே வகை துப்பாக்கி, எம்-16 ரைப்பிள் துப்பாக்கி, அதற்கான குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT