இந்தியா

உ.பி.,யில் மொபைல் வெடித்ததில் இளைஞர் விரலில் காயம்

DIN

உ.பி.,யில் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்ததில் இளைஞரின் விரலில் காயம் ஏற்பட்டது.

உத்தர பிரேத மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தின் ஹிஜாம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஹிமான்ஷு கூறுகையில், "நான் அழைப்பில் இருந்தபோது எனது மொபைல் போனில் தீப்பிடித்தது. இதில் எனது விரலில் காயம் ஏற்பட்டது. நான் அம்ரோஹாவில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மொபைலை வாங்கினேன்.

மேலும் மொபைலுக்கான ரசீதையும் அவர் காட்டினார். இது முதல் வழக்கு அல்ல, கடந்த காலத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. 2019 டிசம்பரில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் போன் வெடித்ததில் காயமடைந்தார்.

இதேபோல் 2019 மார்சில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது அவரது புதிய மொபைல் போன் வெடித்ததில் தீக்காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி.,யில் இளைஞரின் மொபைல் போன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT