இந்தியா

பஞ்சாபில் 6 மாதங்களில் 9,917 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது! 

பஞ்சாபில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 9,917 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். 

IANS

பஞ்சாபில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 9,917 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் 418.44 கிலோ ஹெராயின் போதைப்பொருளை போலீஸார் குழு மீட்டுள்ளதாக அவர் கூறினார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா துறைமுகங்களிலிருந்து 147.5 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 565.94 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டுள்ளது. 

ஹெராயினை தவிர 407 கிலோ அபின், 407 கிலோ கஞ்சா, 233 குவிண்டால் கசகசா மற்றும் 33.88 லட்சம் போதை மாத்திரைகள், ஊசி மற்றும் மருந்து குப்பிகள் ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ரூ.7.72 கோடி பணத்தையும் மீட்டுள்ளனர். 

இதுதொடர்பாக மொத்தம் 7,533 எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT