முகப்பு
இந்தியா

காஷ்மீரில் கடந்தாண்டு 1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது!

காஷ்மீரில் கடந்தாண்டு கிட்டத்தட்ட1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை போலீஸார் தெரிவித்தனர். 

Updated On : 10 ஜனவரி, 2023 at 3:41 PM
பகிர்:

காஷ்மீரில் கடந்தாண்டு கிட்டத்தட்ட1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை போலீஸார் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், 

இந்த காலகட்டத்தில் பணம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் என 
பெருமளவிலான கடத்தல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 1,021 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

Advertisement

கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள்களில் 212 கிலோ கிராம் சரஸ், 56 கிலோகிராம் ஹெராயின், 13 கிலோகிராம் பிரவுன் சுகர், 1.127 டன் பாங், 4.355 டன் பாப்பி ஸ்ட்ரா மற்றும் 1.567 டன் ஃபுக்கி ஆகியவை அடங்கும்.

சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கசகசா மற்றும் பாங்கிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போலீஸார் மேற்கொண்டனர், சுமார் 51 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியிருந்த பயிர்களை அழித்ததாக அவர் கூறினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போர் மேலும் வீரியத்துடன் தொடரும் என்று காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.