இந்தியா

அஃப்தாபின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு!

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

IANS

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். அண்மையில், அவரை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் அஃப்தாப்பின் நீதிமன்ற காவல் இன்று முடிவடையும் நிலையில், மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுக்லா முன் பூனாவாலா ஆஜர்படுத்தப்பட்டார். 

அஃப்தாப் பூனாவாலாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாக்கெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவருக்கு காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT