இந்தியா

3 பைக்குகளில் 14 பேர் சாகசப் பயணம்: வைரல் விடியோ!

DIN

3 பைக்குகளில் 14 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடியோவில், 14 பேர் மூன்று பைக்குகளில் செல்கிறார்கள். ஒரு பைக்கில் ஆறு பேர் மற்றும் மற்ற இரு பைக்குகளில் தலா நான்கு பேர் செல்கிறார்கள். 14 பேர் ஆபத்தான முறையில் பைக்குகளில் பயனம் செய்தனர்.

இந்த சம்பவம் பரேலியின் தியோரானியா பகுதியில் நடந்துள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

"தகவல் கிடைத்ததும், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று மூத்த பரேலி காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார் சௌராசியா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT