ஜோஷிமட்டைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சிறப்புச் சலுகை 
இந்தியா

ஜோஷிமட்டைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சிறப்புச் சலுகை

வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் ஜோஷிமட் நகரில் வாழும் மக்கள், வரும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரகண்ட் அரசு அறிவித்துள்

PTI


டேஹ்ராடூன்: வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் ஜோஷிமட் நகரில் வாழும் மக்கள், வரும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

இந்த மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில  அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், ஜோஷிமட் பகுதியில் வசித்து வருவோர் பெற்றிருக்கும் கடன்களுக்கான தவணைகளை செலுத்த ஓராண்டு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோஷிமட் பகுதியிலிருந்து வெளியேறி, வெளியே வாடகைக்கு குடியிருக்கும் மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் வாடகைப் படி 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT