இந்தியா

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கரோனா! தீவிர சிகிச்சைப் பிரிவில்...

DIN

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவரும் அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவர் சில மாதங்களுக்கு முன்னதாக, நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு அவை இணையத்தில் வைரலாகின. 

இந்நிலையில், தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 24*7 தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், 'இரண்டு மருத்துவர்கள் கடந்த 3 வாரங்களாக என்னை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது 24 நேரமும் செயற்கை ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் கடந்த 3 வாரங்களாக என்னுடன் இருக்கின்றனர். அனைவருக்கும் நன்றி' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT