இந்தியா

பூஜ்ய டிகிரியில் நீடிக்கும் கடும் குளிர்: ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

PTI

ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகப் பதிவாகியுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கடும் குளிரில் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இரவு வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருந்தது என்று வானிலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிகாரின் ஃபதேபூர் பகுதியில் நேற்று இரவு மைனஸ் 3.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. சுருவில் 2.5 டிகிரியும், சிகாரில் 2 டிகிரியும், அல்வார் மற்றும் பில்வாரா 0 டிகிரி செல்சியஸ், சித்தோர்கர் 1.5 டிகிரி செல்சியஸ், தபோக் (உதைபூர்) 2 டிகிரியும், பிகானரில் 2.4 டிகிரியும், ஸ்ரீநகர் 2.4 டிகிரியும் , ஜெய்ப்பூரில் 4.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. 

மாநிலத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கடுமையான குளிர் அலை நிலை தொடரும்.

டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும், அதன் பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்பதால் கடுமையான குளிர் அலை நிலைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT