இந்தியா

பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளோம்: முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

DIN

பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இரண்டு நாள் பயணமாக நேற்று மும்பை சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவரை ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்றனர். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். இங்கு மாநிலத்தின் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கிறேன். மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அறியப்படுகிறது.

மேலும் பல்வேறு முதலீட்டாளர்களை பஞ்சாபிற்கு அழைப்பதும் நல்லது. முந்தைய அரசு மாநிலத்தின் தொழில், கல்வி மற்றும் விவசாயக் கொள்கையை சீரழித்துவிட்டது. நான் முதலீட்டாளர்களை பஞ்சாபிற்கு அழைக்கிறேன். மேலும் நாங்கள் பஞ்சாபில் ஒரு பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளோம். மும்பையில் உள்ள திரைப்பட ஸ்டுடியோக்கள் பஞ்சாபிலும் தங்கள் ஸ்டுடியோக்களை நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பஞ்சாபி சினிமா துறையையும் பாலிவுட்டையும் இணைக்க இங்கு வந்துள்ளேன். பாரத் ஜோடோ யாத்ரா குறித்து கேட்டதற்கு, காங்கிரஸுக்குள்ளேயே பல சர்ச்சைகள் உள்ளன, நாட்டின் ஒற்றுமைக்கு செல்லும் முன் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி முதலில் இணைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை: நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஷீ மிஸ் பியூட்டி விழாவில்... தமிழ்ச் செல்வி!

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் காலமானார்!

பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை பேரா?

நாட்டின் பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!

SCROLL FOR NEXT