மும்பையில் 2 ஆண்டு, 10 மாதம், 14 நாள்களுக்குப் பின் முதல் முறையாக... 
இந்தியா

மும்பையில் 2 ஆண்டு, 10 மாதம், 14 நாள்களுக்குப் பின் முதல் முறையாக...

கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு அதாவது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின், மும்பையில் செவ்வாயன்று ஒரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை.

PTI

மும்பை: கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு அதாவது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின், மும்பையில் செவ்வாயன்று ஒரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை.

அதுமட்டுமல்லாமல், பிரிஹன்மும்பை நகராட்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கரோனா பாதித்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி மும்பையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மிகச் சரியாக 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 14 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக மும்பையில் செவ்வாயன்று புதிதாக கரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.

இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஒரே நாளில் 20,971 பேருக்கு கரோனா உறுதியானது. அதன்பிறகு, நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் கரோனா தொற்று குறையத் தொடங்கியது. மெல்ல ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், ஜனவரி 18ஆம் தேதி ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT