இந்தியா

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பலி

IANS


தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம், ஹஸ்ரா மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், மருத்துவ தம்பதி உள்பட ஆறு பேர் பலியாகினர்.

நள்ளிரவு 2.30 மணிக்கு மருத்துவமனையில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்து ஆறு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மிகப்பெட்டிய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் மருத்துவமனை இயங்கி வந்த நிலையில், அங்கு தீப்பிடித்து, மளமளவென மருத்துவமனை முழுவதும் தீப்பற்றியது. இன்று காலை 10 மணியளவில்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் பிரேமா, டாக்டர் விகாஸ் ஹஸ்ரா மற்றும் நான்கு ஊழியர்கள், இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அவர்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேர்ந்ததால், அனைவரும் தீ விபத்தில் சிக்கி பலியானதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுளள்னர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் எந்த பாதுகாப்புக் கருவிகளும் இல்லை என்றும், பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்ததும் பயங்கர தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT