இந்தியா

மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்துப் பேசிய பிரதமர்!

இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

DIN

இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் முதல் பகுதியும், ஒட்டு மொத்தமாக 97-வது பகுதியுமான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (ஜனவரி 29) உரையாற்றினார்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் உத்தரமேரூர் குறித்தும், அங்குள்ள பழமையான கல்வெட்டுகள் குறித்தும் பெருமிதமாகப் பேசினார். 

மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டுகள் குறித்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உத்தரமேரூர்.  இங்கே, 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது.  இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராம சபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன குறித்தும் அதில் இடம்பெற்றுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT