கர்நாடக அரசின் 5 முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஏற்கனவே ஒரு வாக்குறுதி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று (ஜூலை 1) முதல் மேலும் இரண்டு வாக்குறுதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்ற வாக்குறுதியை சக்தி என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அன்ன பாக்யா திட்டம் மற்றும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிக்க: 300 ஆண்டு பழைமையான நாளிதழ் நிறுத்தம்: கடைசி முகப்புப் பக்கம்
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரிசிக்கு பதில் வழங்க பணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அன்ன பாக்யா திட்டம் வருகிற ஜூலை 10 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கவுள்ளது. வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாங்கள் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளோம். ஜூலை மாதத்துக்கான பணம் பயனாளிகளுக்கு இந்த மாதத்திலேயே வழங்கப்படும். நாங்கள் ஜூலை 1 ஆம் தேதியே பணம் வழங்குகிறோம் எனக் கூறவில்லை. ஜூலை மாதத்துக்கான பணம் பயனாளிகளுக்கு இம்மாதம் 10 தேதிக்குப் பிறகு வழங்கப்படும். அவர்களது வங்கிக் கணக்கில் அவர்களுக்கான பணம் செலுத்தப்படும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, பயனாளிகள் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் அதற்கான தொகை மட்டுமே கட்டணமாக பெறப்படும். அதற்கான ரசீது ஆகஸ்ட் மாதத்தில் தரப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.