அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆகப் பதிவு!
அருணாசலப் பிரதேசத்திலுள்ள சாங்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாசலப் பிரதேசத்திலுள்ள சாங்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில்,
அருணாசலில் உள்ள சாங்லாங் பகுதியில் 61 கி.மீ ஆழத்தில் 96 கி மீ. நீளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 12:55 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் யாருக்கு எந்தவித காயமோ, சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்தது பிகார்?
முன்னதாக மே 22 அன்று அதே பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.