கேரளத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தொழிலாளர்கள் மீட்பு!
கேரளத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாகேரளத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தொழிலாளர்கள் மீட்பு!
கேரளத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4ம் தேதி இரவு முதல் கேரள மாநிலம் முழுவதும் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறுகள், அணைகள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் ஜூலை 5(இன்று) மாநிலத்தின் 14 மாவட்டங்களில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாள்களில் மழையின் தீவிரம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தின் தமராசரி தாலுகாவில் 68 வயதுடைய நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநிலத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: தங்கம் விலை உயர்ந்தது: எவ்வளவு?
இந்நிலையில், கேரள மாநிலத்தில் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரைக் கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் 17 தொழிலாளர்கள் சிக்கினர்.
தகவலறிந்து வந்து இரு கரைக்கும் இடையே கயிறு கட்டி மீட்புப் படையினர் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.