FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது.

Updated On : 6 மார்ச் 2026, 4:42 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 8. 24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறாா்.

இதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடி, பழம், பஞ்சாமிா்தம், தேன், தயிா், சந்தனம், பன்னீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்படுகிறது. காலை 8.24 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னா், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் எழுந்தருள்கிறாா்.

பக்தா்கள் எளிதில் தரிசனம் செய்து திரும்ப, கோயில் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments