FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேதார்நாத் கோயில் வளாகத்தில் விடியோ எடுக்கத் தடை!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலைச் சுற்றி விடியோக்கள் எடுக்கக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

Updated On : 6 ஜூலை 2023, 3:45 pm IST
பகிர்:

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலைச் சுற்றி விடியோக்கள் எடுக்கக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

சமீபத்தில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட விடியோ வைரலான நிலையில், பத்ரி-கேதார்நாத் கோயில் கமிட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 

கோயில் வளாகத்தில் விடியோ எடுத்த நபர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாக கமிட்டி சார்பில் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

Advertisement

Advertisement

அந்த கடிதத்தில், சார்தாம் கோயிலில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோயிலில் புனிதத்தன்மை கெடும் வகையில் மக்கள் புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்து வருகின்றன. இதனால் மக்களின் மத உணர்வுகளை தூண்டுவதாக உள்ளது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவகையில் பக்தர்கள் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மேலும் கோயில் வளாகத்தில் வைத்து, விடியோ, ஷாட்ஸ், இண்டா லீல்ஸ் போன்ற விடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோயில் கமிட்டி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments