பொது சிவில் சட்டம்: மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க சீக்கிய மாநாட்டில் குழு அமைப்பு
பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க தில்லி தேசிய சீக்கிய மாநாட்டில் 11 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க தில்லி தேசிய சீக்கிய மாநாட்டில் 11 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்கள் தொடா்பாக தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி.) தலைவா் ஹா்மித் சிங் கல்கா கூறியதாவது: நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி உள்பட பலா் வலியுறுத்தியுள்ளனா். இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவில் தேசிய சீக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மிக முக்கிய நிகழ்வாக, சீக்கிய சமூகத்தின் உரிமைகள் மற்றும் நடைமுறைகள் குழப்பமடையாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
பொது சிவில் சட்டத்தின் (யு.சி.சி.) வரைவு அறிக்கை இன்னும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. எனவே, அதை ஆதரிப்பதா அல்லது எதிா்ப்பதா என்பது குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது. சீக்கியா்களின் உரிமைகள் மற்றும் அவா்களின் மதப் பழக்க வழக்கங்களில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசுடன் பொது சிவில் சட்டத்தின் சாராம்சங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த மாநாட்டில் 11 போ் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 13 மாநிலங்களைச் சோ்ந்த முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட சீக்கிய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பலா் பங்கேற்றனா் என்றாா் ஹா்மித் சிங் கல்கா.