முகப்பு
இந்தியா

வாரங்கல் காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

தெலங்கானாவின் வாரங்கலில் உள்ள பிரபல பத்ரகாளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு மேற்கொண்டார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

தெலங்கானாவின் வாரங்கலில் உள்ள பிரபல பத்ரகாளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு மேற்கொண்டார். 

பிரதமர் மோடியுடன் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தெலங்கானா பாஜக தலைவர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் பிற தலைவர்களும் இணைந்து வழிபாடு மேற்கொண்டனர். 

நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி ஹைதராபாத் வந்தடைந்தார். இந்நிலையில் வாரங்கலில் உள்ள பத்ரகாளி கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டார். 

நெடுஞ்சாலை முதல் ரயில்வே வரை வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.6,100 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

பிரதமர் தொடங்கவிருந்து பல்வேறு திட்டங்கள் தெலங்கானா மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.