இந்தியா

ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

DIN

கனமழை காரணத்தால் ஹிமாசலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாசலில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஹிமாசலின் அனைத்து ஆறுகளிலும்  கனமழை காரணமாக நீர் நிரம்பி காணப்படுகிறது. வானிலை மையம் ஹிமாசலின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் 14 இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 13 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 700 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லா மாவட்டத்தில் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹிமாசலின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT