இந்தியா

ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

கனமழை காரணத்தால் ஹிமாசலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

DIN

கனமழை காரணத்தால் ஹிமாசலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாசலில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஹிமாசலின் அனைத்து ஆறுகளிலும்  கனமழை காரணமாக நீர் நிரம்பி காணப்படுகிறது. வானிலை மையம் ஹிமாசலின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் 14 இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 13 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 700 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லா மாவட்டத்தில் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹிமாசலின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT