திருப்பதி: காரும், லாரியும் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி
காளஹஸ்தியில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காளஹஸ்தியில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் காரும், லாரியும் நேருக்நேர் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவு தினம் அனுசரிப்பு!
விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பும்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.