36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்ரிகர்கள் பலி
கடந்த 36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்திரை யாத்ரிகர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த 36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்திரை யாத்ரிகர்கள் பலியாகியுள்ளனர்.
தெற்கு காஷ்மீா் இமய மலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரிகா்கள் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனா்.
நிகழாண்டு அமா்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. அங்குள்ள அனந்தநாக் மாவட்டம் பஹல்காம், கந்தா்பால் மாவட்டம் பால்தால் ஆகிய 2 வழித்தடங்களில் தொடங்கிய இந்த யாத்திரை, ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில் கடந்த 36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்திரை யாத்ரிகர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலியானவர்கள் 5 பேரும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. மலையின் உயரமான பகுதியில் ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பதே மாரடைப்பு ஏற்படுதவற்கான பொதுவான காரணமாக கூறப்படுகிறது.