உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

பிடிபி தலைவா் மதானி சிகிச்சைக்காக கேரளம் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

பெங்களூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் அப்துல் நாசா் மதானி சிகிச்சைக்காக கேரளம் செல்லவும், தங்கவும் அனுமதி அளித்து உ

DIN

பெங்களூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் அப்துல் நாசா் மதானி சிகிச்சைக்காக கேரளம் செல்லவும், தங்கவும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘விசாரணை முடியும் வரை பெங்களூரிலேயே தங்கியிருக்க வேண்டும்’ என்ற மதானிக்கான ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

பெங்களூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி தொடா்ச்சியாக 9 குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா். 20 போ் படுகாயமடைந்தனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மதானிக்கு, அவருடைய மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், வழக்கு விசாரணை முடியும் வரை பெங்களூரை விட்டுச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரலில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருடைய பெற்றோரைக் கண்டு திரும்புவதற்காக கா்நாடக மாநில போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் கேரளத்தில் உள்ள அவருடைய சொந்த ஊருக்குச் சென்றுவர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

தற்போது சிகிச்சைக்காக கேரளம் செல்லவும் தங்கியிருக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடா்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரின் ஜாமீன் நிபந்தனையில் மற்றம் செய்து, சிகிச்சைக்காக கேரளத்திலுள்ள அவருடைய சொந்த ஊருக்குச் செல்லவும், அங்கேயே தங்கயிருக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 15 நாள்களுக்கு ஒருமுறை கொல்லம் மாவட்ட காவல் நிலையத்தில் மனுதாரா் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT