இந்தியா

அமர்நாத்தில் 2.90 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

DIN

அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை சுமார் 2.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 1-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 20 நாளில் குகைப் பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இந்நிலையில், 4,600 பேர் அடங்கிய மற்றொரு குழு 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. 

அதில், 2,850 பேர் 106 வாகனங்களில் பஹல்காம் பாதையிலும், 63 வாகனங்களில் 1,825 பேர் பால்டால் வழியாகவும் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

62 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

யாரென்று தெரிகிறதா?

விஜய் வழங்கும் கல்வி விருது விழா: ஏற்பாடுகள் தீவிரம்

எல்லோருக்கும் தேங்க்ஸ் - சிஎஸ்கே!

எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

SCROLL FOR NEXT