இந்தியா

அமர்நாத்தில் 2.90 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை சுமார் 2.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

DIN

அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை சுமார் 2.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 1-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 20 நாளில் குகைப் பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இந்நிலையில், 4,600 பேர் அடங்கிய மற்றொரு குழு 169 வாகனங்களில் பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. 

அதில், 2,850 பேர் 106 வாகனங்களில் பஹல்காம் பாதையிலும், 63 வாகனங்களில் 1,825 பேர் பால்டால் வழியாகவும் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

62 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT