கோப்புப்படம் 
இந்தியா

பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள்: ம.பி.முதல்வர் 

மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.  

DIN

மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.  

மாநில தலைநகர் போபாலில் உள்ள மோதிலால் நேரு அரங்கத்தில் பெண் காவலர்கள் 250 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதின் முக்கிய காரணம் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பெண்களின் சுய மரியாதையையும் பாதுகாப்பார்கள். 

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மாநில அரசால் பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை உருவாக்கிய முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ரூ. 50-ல் சென்னையை சுற்றிப் பார்க்க... ‘சென்னை உலா’ பேருந்து சேவை! இன்றுமுதல்!!

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

SCROLL FOR NEXT