கோப்புப்படம் 
இந்தியா

மேக்கேதாட்டு அணை குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன்: டி.கே. சிவக்குமார்

மேக்கேதாட்டு அணை குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

DIN

மேக்கேதாட்டு அணை குறித்து தமிழக அரசிடம் முறையிடுவேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

கர்நாடத்தில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேக்கேதாட்டு  திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும்.

மேக்கேதாட்டு  திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். மேக்கேதாட்டு அணையால் காவிரி படுகை விவசாயிகளுக்கு பாசன நீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும். தமிழக மக்கள் மீது கோபமோ, வெறுப்போ எனக்கு இல்லை. அவர்களை சகோதரர்களாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். 

முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்து நிலையில், டி.கே. சிவக்குமாரின் இந்த ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

இந்தியாவில் ஓப்போ எஃப் 31 விரைவில் அறிமுகம்!

செல்ஃபி ஸ்மைல்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT