இந்தியா

பாகிஸ்தானின் மூத்த வழக்குரைஞர் அப்துல் ரஸாக் சுட்டுக் கொலை!

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கைத் தாக்கல் செய்ய மூத்த பாகிஸ்தான் வழக்குரைஞர் அப்துல் ரஸாக் ஷார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

DIN

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கைத் தாக்கல் செய்ய மூத்த பாகிஸ்தான் வழக்குரைஞர் அப்துல் ரஸாக் ஷார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவின் விமான நிலைய சாலையில், நீதிமன்றத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் அப்துல் ரஸாக் ஆயுதமேந்தி வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வழக்குரைஞர் உடனடியாக குவெட்டா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பலத்த காயமடைந்த அவர் பாதி வழியிலேயே உயிரிழந்தார். 

குவெட்டா சிவில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஆயிஷா ரியாஸ் கூறுகையில், 

அப்துல் ரஸாக் ஷார் கொடிய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவர் மீது 16 குண்டுகள் பாய்ந்துள்ளதால், மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் ஷார் மீது தாக்குதல் நடத்தினர். அவரது மார்பு, கழுத்து, வயிற்றுப் பகுதியில் 16 குண்டுகள் அவர் மீது பாய்ந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி குல் முஹம்மது தெரிவித்தார். 

குவெட்டா பார் அசோசியேஷன் தலைவர் அபிட் கக்கர் பலூசிஸ்தான் உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் முழுமையான புறக்கணிப்பை அறிவித்தார். மேலும் ஷேரின் மரணம் தொடர்பாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT