இந்தியா

ரோபோ உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க முயற்சி!

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமியை ரோபோ உதவியுடன் மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. 

DIN

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமியை ரோபோ உதவியுடன் மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. 

கடந்த ஜூன் 6-ம் தேதி ம.பி.யின் முங்காவல்லி கிராமத்தில் பண்ணை நிலத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமி சிருஷ்டி குஷ்வாஹா, 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தாள். 

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், சிறுமியை மீட்க ராணுவம் அழைக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று ரோபோட் உதவியுடன் குழந்தையை மீட்க நிபுணர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரும் தேர்தலில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெறாது: தவெகவில் இணைந்த முன்னாள் நிர்வாகி!

35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி..! 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு ஆட்ட நாயகன் விருதில்லை!

முன்னேற்றப் பாதையில் இந்தியா - அமெரிக்கா உறவு: ரஷியா என்ன நினைக்கிறது?

நாட்டிலேயே முரட்டு அடிமை யார் தெரியுமா? உதயநிதி கடும் விமர்சனம்

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் இல்லை!

SCROLL FOR NEXT