இந்தியா

ஜூலையில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் 

சந்திராயன் 3 விண்கலம் இந்த வருடம் ஜூலை 12 முதல் 19-க்குள் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார். 

DIN

சந்திராயன் 3 விண்கலம் இந்த வருடம் ஜூலை 12 முதல் 19-க்குள் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார். 

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 

இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன் 3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதாக கூறினார். இதேபோல் விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் இருந்து சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. 

விண்கலத்தில் தரை இறங்குதல், உலாவுதல் மற்றும் லேடர், ரோவர் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இந்நிலையில், தற்போது பரிசோதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விண்கலம் ஏவுதலின் போது எந்தவித இடையூறும் ஏற்படாதவண்ணம் விஞ்ஞானிகள் துல்லியமாக சோதித்து வருகின்றனர்.

இதேபோன்று சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். அனைத்து சோதனைகளும் முடிந்தபிறகு இந்தியாவின் லட்சிய திட்டமான சந்திராயன் 3 அடுத்த மாதம் 12-19-க்கு இடையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT