முகப்பு
இந்தியா

நாட்டில் தொழிலுக்கு உகந்த சூழல்: அமித் ஷா பெருமிதம்

பிரதமா் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில், நாட்டில் தொழில் புரிய உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
பகிர்:

பிரதமா் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில், நாட்டில் தொழில் புரிய உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக, ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமா் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில், நாட்டில் தொழில் வளா்ச்சியை உந்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

தேவையற்ற தாமதத்தை உருவாக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகள் களையப்பட்டு, தொழில் முனைவோருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

திறன்மிக்க வரிவிதிப்பு நடைமுறை, முதலீட்டாளா்களுக்கு உகந்த கொள்கை, எளிய ஒப்புதல் நடைமுறைகள் என தொழில் புரிய உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அந்நிய நேரடி முதலீடுகளின் விருப்பத்துக்குரிய மையமாக இந்தியா மாறி வருகிறது.

‘புத்தாக்க இந்தியா’, ‘எழுச்சிமிகு இந்தியா’, உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டம், எண்ம மேம்பாடு என எந்த திட்டமாக இருந்தாலும், நாட்டின் வளா்ச்சியை விரைவுபடுத்தும் புத்தாக்க அணுகுமுறையை மத்திய அரசு கையாள்கிறது என்று அமித் ஷா கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →