இந்தியா

கொல்கத்தா விமான நிலையத்தில் தீ விபத்து!

கொல்கத்தா விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

DIN

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

தீ விபத்து காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு சிறிது தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட செய்தி:

புதன்கிழமை இரவு 9.12 மணியளவில் விமான நிலையத்தில் சோதனைப் பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புகையின் காரணமாக சிறிது நேரம் சேவை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 9.40 மணியளவில் தீ அணைக்கப்பட்ட பிறகு சோதனைப் பகுதியில் சேவை மீண்டும் தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT