இந்தியா

ஜூன் 20ல் கலைஞர் கோட்டத்தை திறக்கிறார் பிகார் முதல்வர் 

திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைக்கிறார். 

DIN

திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைக்கிறார். 

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் ‘கலைஞா் கோட்டம்’, முத்துவேலா் நூலகம் திறப்பு விழா ஜூன் 20-ஆம் தேதி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

விழாவில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். கருணாநிதி திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு திமுகவினர் திரண்டு வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7,000 சதுர அடியில், ரூ.12 கோடி மதிப்பில் திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் - புதிய வேரியண்ட் அறிமுகம்!

காலை / இரவு உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? - நம்பிக்கையும் உண்மையும்

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

SCROLL FOR NEXT