அமர்நாத் யாத்திரை: ராணுவ தளபதி ஆய்வு
அமர்நாத் வருடாந்திர யாத்திரை தொடங்கவுள்ள நிலையில் அங்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவ தளபதி இன்று ஆய்வு செய்தார்.
அமர்நாத் வருடாந்திர யாத்திரை தொடங்கவுள்ள நிலையில் அங்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவ தளபதி இன்று ஆய்வு செய்தார்.
2023ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 62 நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் யுபேந்திர திவேதி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் தெற்கில் கந்தர்பாலில் பால்டால் வழியாகவும், வடக்கில் அந்த்நாக் மாவட்டத்தின் பஹல்கல்காம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தாண்டு நடைபெறும் அமர்நாத் யாத்திரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவ தளபதி இன்று ஆய்வு மேற்கொண்டார்.