காதலுக்காக கடத்தல் நாடகமாடிய சிறுமி: பெற்றோர்கள் அதிர்ச்சி!
மகாராஷ்டிர மாநிலத்தில் காதலருடன் சென்றுவிட்டு கடத்தப்பட்டதாக சிறுமி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர்: மகாராஷ்டிர மாநிலத்தில் காதலருடன் சென்றுவிட்டு கடத்தப்பட்டதாக சிறுமி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் குடியிருக்கும் 17 வயது சிறுமி, ஒரு கம்பெனியின் பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு என்ற சிறுமி மாலை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருக்கும்போது, தான் கடத்தப்பட்டதாக சகோதரரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அச்சிறுமி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் விரார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியதில், அச்சிறுமி தனது ஆண் நண்பருடன் கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்றது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிறுமி மற்றும் அவரின் ஆண் நண்பரை பிடிப்பதற்காக காவல்துறையினர் கொல்கத்தா விரைந்துள்ளனர்.