இந்தியா

முதல் திரிபுரா முதல்வரின் மனைவிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு!

திரிபுரா மாநிலத்தின் முதன்முதலாக தேர்வுசெய்யப்பட்ட முதல்வரின் மனைவிக்கு அம்மாநில அரசு பங்களா ஒதுக்கீடு செய்துள்ளது. 

DIN

திரிபுரா மாநிலத்தின் முதன்முதலாக தேர்வுசெய்யப்பட்ட முதல்வரின் மனைவிக்கு அம்மாநில அரசு பங்களா ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சிந்திர லால் சிங் முதன்முதலாக திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். 

இவர் ஜூலை 1, 1963 முதல், 1973 நவம்பர் 1 வரை வடகிழக்கு மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்தார். கடந்த 2000-த்தில் சிங் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

இந்நிலையில், 91 வயதான சிங்கின் மனைவி சமீபத்தில் முதல்வர் மாணிக் சாஹாவிடம் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

சுதந்திர போராளியும், முன்னாள் முதல்வருமான சச்சிந்திர லால் சிங்கின் பங்களிப்பு குறித்து புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், சிங்கின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அகர்தலாவில் பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, சிங்கின் மனைவி இறக்கும் வரை அந்த பங்களாவை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT