சத்தீஸ்கரில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்த சர்வாதிகார அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்தல் இருக்காது: மம்தா பானர்ஜி
இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு பருவமழை சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. அடுத்த 2-3 நாட்களில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். அடுத்த 48 மணி நேரத்தில் சத்தீஸ்கரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.