முகப்பு
இந்தியா

18 மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நாட்டில் 18 மாநிலங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் 18 மாநிலங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →