முகப்பு
இந்தியா

ஹிமாசலில் வெள்ளம்: 6 பேர் பலி; 10 பேர் காயம்

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஹிமாசலில் வழக்கமாக பருவமழை தொடங்குவதைக் காட்டிலும் சற்று முன்னதாகவே பருவழை தொடங்கி மாநிலத்தில் கனமழை பெய்ததுள்ளது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தின் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் ஒன்கர் சந்த் ஷர்மா கூறுகையில், "இதுவரை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 303க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

இந்த கனமழையால் அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 124 சாலைகள் சேதமடைந்துள்ளது.

மேலும், மண்டி - பண்டோ பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. எனவே வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டி-பராஷர் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஹிமாசல் மாநிலத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கை தொடரும்" என்று ஒன்கர் சந்த் ஷர்மா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →