ஒடிஸாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் இன்னும் 52 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.
அவை, புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 கண்டெய்னா்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
பாலசோா் மாவட்டத்தில் பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து கடந்த 2-ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 287 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 6 போ், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனா்.
உயிரிழந்தோரில் பலரது சடலங்கள், சிதைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன. இதனால் 81 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படாமல் இருந்தன.
ஒரு சடலத்துக்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், மரபணு சோதனை மூலம் சடலங்களை அடையாளம் காண ரயில்வேயும், புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையும் முடிவு செய்தன.
இந்நிலையில், 81 பேரில் 29 பேரின் சடலங்கள், மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, புவனேசுவரம் மாநகராட்சி மேயா் சுலோச்சனா தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மீதமுள்ள 52 சடலங்களையும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது; தில்லியில் உள்ள மத்திய ஆய்வகத்தில் இச்சோதனைகள் நடைபெறுகின்றன. மாதிரிகள் அனுப்பப்பட்டு, 20 நாள்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கப் பெறுகிறது என்றாா் சுலோச்சனா தாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.