முகப்பு
இந்தியா

மூளைச்சாவு அடைந்தவரால் காப்பாற்றப்பட்ட 4 உயிர்கள்!

மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 32 வயது நபரின் இதயம், கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியதால் நான்கு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

Updated On : 1 மார்ச் 2023, 4:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 32 வயது நபரின் இதயம், கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியதால் நான்கு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், பிப்ரவரி 25 அன்று தில்லியின் மஹிபால்பூரில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி, மிகவும் ஆபத்தான நிலையில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக செவ்வாய்க்கிழமை மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நோயாளியின் குடும்பத்தினர் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவரது இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதயம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், கல்லீரல் சர் கங்கா ராம் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் ஷாலிமார் பாக் மேக்ஸ் மருத்துவமனைக்கும், இரண்டாவது சிறுநீரகம் ஃபோர்டிஸ் மருத்துவமனை நோயாளிக்கு மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments