ஜி-20 மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பூந்தொட்டிகள் மாயம்: வைரலான விடியோ 
இந்தியா

ஜி-20 மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பூந்தொட்டிகள் மாயம்: வைரலான விடியோ

ஜி-20 மாநாட்டுக்காக, சாலைகளை அலங்கரிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

ஜி-20 மாநாட்டுக்காக, சாலைகளை அலங்கரிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து விலைஉயர்ந்த கார் மற்றும் திருடப்பட்ட தொட்டிச் செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர்  பேசுகையில், மன்மோகன் என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாலைகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளைத் திருடிச் சென்றக் குற்றத்துக்காக அவர் கது செய்யப்பட்டுள்ளார். அவரது விலைஉயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

ஷங்கர் சௌக் பகுதியில் நடைபெறும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை, விலை உயர்ந்த காரில் வந்த இருவர், காரின் பின் பக்கத்தில் ஏற்றிச் சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து குருகிராம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஹரியாணா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதைக் கொண்டு 50 வயது நபர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி பேச்சு!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT