தில்லி செல்லும் ரயில் வழக்கம் போல் இன்று இயக்கம்
திருவனந்தபுரத்திலிருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 2) வழக்கம்போல் இயக்கப்படும்.
திருவனந்தபுரத்திலிருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 2) வழக்கம்போல் இயக்கப்படும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளத்தின் திருவனந்தபுரத்திலிருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் (வண்டி எண்: 12625) இயக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை (மாா்ச் 2) ஆக்ரா காண்ட், எத்மத்பூா், மிடாவலி, காஜியாபாத் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.