இந்தியா

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் குழு இன்று தமிழகம் வருகை!

DIN

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிகார் அரசின் 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது. 

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் மூலமாக வதந்தி பரவி வருகிறது. 

ஆனால், இந்த விடியோக்கள் போலியானவை என்றும் இதுபோன்று வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் கூறியிருந்தார். 

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பிகார் அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது. 

இதுகுறித்து இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநில குழுக்கள் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT