இந்தியா

மும்பையில் கடற்படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர், மும்பை கடற்கரைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியது.

ANI


புது தில்லி: இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர், மும்பை கடற்கரைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியது.

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று கடற்படை வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மும்பை கடற்கரைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயல்பட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதால், மூன்று வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT